நஞ்சைய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி
தமிழ் மன்றம்
தொழில் கல்வி பயிலும் மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் அவர்களிடையே பொதிந்துள்ள தமிழ் சார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு தமிழ் மன்றமானது துவங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமானது, மாணவர்களிடையே நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பேணிப் போற்றுவதாகும். அதன் பொருட்டு தமிழ் அறிஞர்களின் மூலம் நற்கருத்துக்கள் போதிக்கப்படுகிறது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கூற்றிற்கு ஏற்பவும் "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்பதனை மெய்யாக்கும் வகையிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி, பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகள் பலபெற்று வெற்றிவாகை சூடிட தமிழ் மன்றம் வழிவகை செய்கின்றது.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!